close
Choose your channels

மைக்கை தூக்கி எறிந்த சம்பவம்: முத்தம் கொடுத்து சமாதானமான பார்த்திபன்!

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது திடீரென மைக் வேலை செய்யவில்லை என மைக்கை பார்த்திபன் தூக்கி எறிந்தார். அவர் தூக்கி எறிந்த மைக், ’இரவின் நிழல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ரோபோ சங்கர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தான் தூக்கி எறிந்த மைக் ரோபோ சங்கர் மீது பட்டதை அடுத்து ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்து சமாதானம் ஆகி உள்ளார். இதுகுறித்து தனது ஸ்டைலில் பார்த்திபன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

’மைக்கை கண்டுபிடித்தவர் ஈமைல் பெர்லினர்... மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர்... மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ண பார்த்திபன்.. முடிவில் முத்தமிட்டவர்’ என பதிவு செய்துள்ளார். மேலும் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos