பார்த்திபனின் அடுத்த வித்தியாசமான முயற்சி: இதுவும் உலகின் முதல்முறையா?

  • IndiaGlitz, [Tuesday,July 19 2022]

’புதியபாதை’ படம் முதல் பார்த்திபனின் அனைத்து படங்களுமே வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் எடுத்து வரும் திரைப்படங்கள் தனித்துவமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்து சாதனை செய்த நிலையில் சமீபத்தில் வெளியான ’இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதலில் வெளியான சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் அடுத்த முயற்சியாக மனிதர்களே இல்லாமல் முழுக்க முழுக்க மிருகங்களை வைத்து படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஹாலிவுட்டில் முழுக்க முழுக்க விலங்குகள் உடைய அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது என்றாலும் உண்மையான விலங்குகளை வைத்து முழுக்க முழுக்க ஒரு திரைப்படம் எடுப்பது உலகில் இது முதல் முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தேவர் பிலிம்ஸ் உள்பட பல நிறுவனங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் நடித்த திரைப்படங்களை தயாரித்த தற்போது முதல் முறையாக விலங்குகள் மட்டுமே நடிக்கும் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவுள்ள பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

சிம்பு-அருள்நிதி மோதல்: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

இந்த வாரம் சிம்பு மற்றும் அருள்நிதி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செருப்பு மாலை போட்ட பார்த்திபன் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கமெண்ட் என்ன தெரியுமா?

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தை விமர்சனம் செய்த புளூசட்டை மாறனின் உருவ பொம்மைக்கு பார்த்திபனின் ரசிகர்கள் செருப்பு மாலை போட்ட நிலையில்

காலையில் பாசிட்டிவ், மாலையில் நெகட்டிவ்: மணிரத்னம் கொரோனா செய்தியால் பரபரப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

ஜெயம் ரவி - நயன்தாரா படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்: ரிலீஸ் எப்போது?

'தனி ஒருவன்' படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வரும் 'இறைவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

லோகேஷின் அடுத்த படத்தில் கமலும் இல்லை, ரஜினியும் இல்லை, இந்த பிரபலம் தான்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க இருக்கிறார்