close
Choose your channels

'ஆடை' என் படத்தின் கதை: பார்த்திபன்

Sunday, July 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அமலாபாலின் போல்டான நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற 'பிராங்க் ஷோ' குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் கூறியிருப்பதால் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தால் பிராங்க் ஷோ தடை செய்யப்பட்டால் அது இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே தான் இயக்கி வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என்பது போல் ஒரு ட்வீட்டை இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார் அவர் தனது டுவீட்டில் கூறியிருப்பதாவது; 

PRANKly speaking-ஆடை படத்தின்  மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது.

இந்த படம் தான் 15 வருடங்களுக்கு முன்பு நடித்து, இயக்கிய 'குடைக்குள் மழை' என்ற படத்தின் காப்பி என்பது போல் மேற்கண்ட டுவீட்டில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் வெளியானபோது இந்த படம் தான் நடித்த 'உள்ளே வெளியே' படத்தின் காப்பி என்றும் இவ்வாறு காப்பியடித்தது ஒரு அயோக்கியத்தனம் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பார்த்திபன் தெரிவித்திருந்தார். இவ்வளவிற்கும் 'அயோக்யா' படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.