துக்ளக் தர்பார் பிரச்சனை: சீமானை சமாதானம் செய்ய பார்த்திபன் செய்த முயற்சி!

  • IndiaGlitz, [Wednesday,January 13 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் நடித்த ’துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான போது அதில் பார்த்திபனின் அரசியல்வாதி கேரக்டர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்று இருந்ததாகவும் அவரது கட்சியை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறினார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இந்த படம் வெளியாகும் போது நாம் தமிழர் கட்சியினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் சீமானை சமாதானப்படுத்த கூறியிருப்பதாவது:

நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

பார்த்திபனின் இந்த சமாதானத்தை சீமானும் அவரது கட்சியினர்களும் ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரசம் சாப்பிட்டால் கொரோனா போய்டும்… தமிழக அமைச்சரின் புது விளக்கம்!!!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவில் ரசத்தை சேர்த்து கொடுத்ததினால் இந்தியர் ஒருவர் பெரிதும் பாராட்டப் பெற்றார்.

'பத்து தல' படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ!

சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின்

கணவனுக்கு நாயைப்போல சங்கிலி மாட்டி நடுரோட்டில் வாக்கிங் சென்ற பெண்… வைரல் வீடியோ!!!

கொரோனா நேரத்தில் விசித்திரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடைபெற்று இருக்கிறது

சுரேஷ் பதிவு செய்த மர்மமான டுவீட்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் வீட்டில் திங்கள்கிழமை முதல் எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஃபைனலுக்கு செல்லும் முன் பணத்துடன் வெளியேறும் போட்டியாளர் யார்? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார்.