ஏ.ஆர்.ரஹ்மான் டியூனுக்கு பாடல் எழுதிய பிரபல இயக்குனர்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கம்போஸ் செய்த டியூனுக்கு ஒரு பாடலை எழுதியதாக பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த பரவசத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தற்போது ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் உலகிலேயே முதன் முதலாக உருவாகும் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் புதிதாக கம்போஸ் செய்த பாடல் ஒன்றுக்கு பாடல் வரிகள் எழுதி தரும்படி தன்னிடம் அனுப்பியதாகவும் அந்த டியூனை கேட்டு தான் பரவசம் அடைந்ததாகவும் இந்த படத்தில் உள்ள முழு கதையையும் அந்த பாடலில் கொண்டு வரும் அளவுக்கு ஒரு வாரம் கால அவகாசம் எடுத்து அந்த பாடலை எழுதி உள்ளதாகவும் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

இரவின் நிழல்’-ஏ ஆர் ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு (திரைக்கு) வரும்போது ருசிக்கும்.

More News

எஸ்ஜே.சூர்யா வேடத்தில் நடிக்க இருந்தவர் இந்த நடிகரா? 'மாநாடு' இயக்குனரின் ஆச்சரியமான தகவல்

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று ரிலீசானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

பாவனியை லவ் பண்றியா? ராஜூ கேட்ட கேள்வியால் அதிர்ந்த போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பாவனியை லவ் பண்றியா என போட்டியாளர் ஒருவரை பார்த்து ராஜூ கேட்டவுடன் அந்த போட்டியாளர் அதிர்ச்சி அடைந்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

வடகொரியாவில் வெப் சீரிஸை பரப்பிய நபர்… கிம் என்ன செய்தார் தெரியுமா?

சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவில் டிவி, இண்டர்நெட், திரைப்படங்கள் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

100 வெளிநாட்டு டான்சர்கள்: மீண்டும் பிரமாண்டம் காட்டும் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தான் என்பதும் பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர்தான் என்பதும் திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும்

ஆபத்தான நிலையில் நால்வர்: இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் மொத்தம் 6 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்பதும் அவர்கள் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி என்பதும் தெரிந்ததே.