வெள்ளந்தி சிரிப்பு இன்றும் என் கண் முன்னே நிற்கிறது: 'பருத்திவீரன்' நடிகை மறைவுக்கு கார்த்தி டுவிட்

  • IndiaGlitz, [Friday,May 07 2021]

கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பருத்தி வீரன். இந்த திரைப்படத்தில் கார்த்தியின் ’அப்பத்தா’வாக நடித்த நடிகை பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமானார்

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார் என்பதும், இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது நாயகி பிரியாமணிக்கு கிடைத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் பொன்வண்ணன், சரவணன், கஞ்சாகருப்பு உள்பட பலர் நடித்திருந்த நிலையில் கார்த்தியின் ’அப்பத்தா’ கேரக்டரில் பஞ்சவர்ணம் என்ற நடிகை நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் விமர்சகர்கள் இடையே பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை பஞ்சவர்ணம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

More News

பெல்ஜியத்தை  சேர்ந்த இளம்பெண் நண்பர்களால் சுட்டுக்கொலை...!

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த, பிரிட்டிஷ்-பெல்ஜிய இளம்பெண் அவளுடைய 2 ஆண் நண்பர்களால் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

தமிழக முதல்வராக இன்று முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே

கிளாமரில் களமிறங்கிய செய்தி வாசிப்பாளர்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்கள்!

பொதுவாக சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பெரியதிரை நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி கடலில் குதித்து லைக்ஸ்களை அள்ளுவார்கள் என்பது தெரிந்ததே.

எங்கள் இளவரசிக்கு அரை பிறந்த நாள்: நடராஜன் நெகிழ்ச்சியான டுவிட்

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மகளுக்கு 6 மாத வயது ஆகியதை அடுத்து எங்கள் இளவரசிக்கு அரை பிறந்தநாள் என ந்எகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

என்னை தவிர எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கொரோனா: விஜய்யின் 'குஷி' நடிகை தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர்