close
Choose your channels

வெள்ளந்தி சிரிப்பு இன்றும் என் கண் முன்னே நிற்கிறது: 'பருத்திவீரன்' நடிகை மறைவுக்கு கார்த்தி டுவிட்

Friday, May 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பருத்தி வீரன். இந்த திரைப்படத்தில் கார்த்தியின் ’அப்பத்தா’வாக நடித்த நடிகை பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமானார்

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார் என்பதும், இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது நாயகி பிரியாமணிக்கு கிடைத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் பொன்வண்ணன், சரவணன், கஞ்சாகருப்பு உள்பட பலர் நடித்திருந்த நிலையில் கார்த்தியின் ’அப்பத்தா’ கேரக்டரில் பஞ்சவர்ணம் என்ற நடிகை நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் விமர்சகர்கள் இடையே பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை பஞ்சவர்ணம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.