கணவருடன் நீச்சல் குளத்தில்.. பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடிய பார்வதி நாயர்.. கிளாமர் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை பார்வதி நாயர், தற்போது தன் கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் அனுபவித்து வருகிறார். இந்த ஹனிமூன் பயணத்தின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர், தமிழில் 'நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’, கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’, மற்றும் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ’மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட, அவர் விஜய்யின் ‘கோட்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, ’ஆலம்பனா’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், பார்வதி நாயர் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அவருக்கு சுமார் 2 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இதனிடையே, தொழில் அதிபர் அஸ்வித் அசோக் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பார்வதி நாயர், தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். நீச்சல் குளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படம், நீச்சல் குளத்தின் நடுவில் காலை உணவு உண்பதை காட்டும் புகைப்படம், பின்னணியில் அழகான கடற்கரை கொண்ட புகைப்படங்கள் என பல அரிய தருணங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments