close
Choose your channels

'பசங்க' குழந்தை நட்சத்திரத்தை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’பசங்க’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகரை விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ’பசங்க’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் பெற்றது என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக கிஷோர், ஸ்ரீராம், பாண்டி ஆகிய மூவரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருந்த நிலையில் தற்போது கிஷோருக்கு திருமணம் ஆகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஆபீஸ்’ உள்பட சீரியல்களில் நடித்த ப்ரீத்திக்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை கிஷோர் மற்றும் ப்ரீத்திக்குமார் ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.