close
Choose your channels

பிரபல பட்டிமன்ற பெண் பேச்சாளர் அப்பல்லோவில் அனுமதி!

Monday, August 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பட்டிமன்ற பெண் பேச்சாளர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் குழுவில் இடம்பெற்றிருக்கும் பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். இவருடைய பேச்சுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டம் இருக்கிறது என்பதும் இவரது பேச்சை ஏராளமானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகிய இருவரும் ஒவ்வொரு பட்டிமன்றத்தில் எதிரெதிர் அணியில் இருந்து ஒருவரை ஒருவர் நாகரீகமாகவும் நகைச்சுவையாகவும் தாக்கி பேசிக்கொள்வது பட்டிமன்றத்தில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறப்படுகிறது. இதனை அடுத்து பாரதிபாஸ்கர் விரைவில் நலம் பெற்று மீண்டும் பட்டிமன்றத்தில் தனது பேச்சைத் தொடர வேண்டும் என்று அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சக பட்டிமன்ற பேச்சாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.