close
Choose your channels

போதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்!

Monday, November 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக திரையுலகினர் இடையே போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உள்பட ஒருசில நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் பவன் சவுரியா என்பவருக்கு டாக்டர் லிகிதா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இரு குடும்பத்தின் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நடிகர் பவனுக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்பட்ட மணமகள் வீட்டார் திடீரென நிச்சயதார்த்தத்தை நிறுத்தினர்

இதனை அடுத்து இரு தரப்பினரும் கடந்த சில மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. இது குறித்து நடிகர் பவன் சவுரியா கூறியபோது, ‘எனக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்பட்டு மணமகள் வீட்டினர் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்

ஆனால் நான் என்னுடைய பழக்க வழக்கத்தை லகிதாவிடம் கூறி புரிய வைத்தேன். எனக்கு எந்த போதைப்பழக்கமும் இல்லை என்பதை விளக்கினேன். லகிதா டாக்டர் என்பதால் புரிந்துகொண்டார் எனக்கு போதை பழக்கம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே தற்போது மணமகள் குடும்பத்தார் நிச்சயதார்த்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். எளிமையாக எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. எங்களது திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடக்கும் என்று அவர் கூறினார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.