close
Choose your channels

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு!

Saturday, April 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனது பண்ணை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது செயலாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு தீவிரம் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் சச்சின், நடிகர் அமீர்கான், ஆலியாபட், ரன்வீர் கபூர், தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகர் பவண் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பவண் கல்யாணின் செயலாளர் ஹரிபிரசாத் அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பவண் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனினும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து பவண் கல்யாணை அவரது குடும்ப மருத்துவரும் அப்போல்லோ மருத்துவமனை நிபுணர் குழுவினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மேலும் முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்த நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி இருந்ததால் இரண்டாவது முறையாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது எனத் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் நடிகர் பவண் கல்யாண் விரைவில் குணமாகி இயல்பு நிலைக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.