close
Choose your channels

என் டுவிட்டர் அக்கவுண்ட்டை சஸ்பெண்ட் செய்தது ஏன்? பிரபல நடிகை ஆவேசம்

Wednesday, July 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தனது ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்தது ஏன் என ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகை பயல் ரோஹாட்கி (Payal Rohatgi) கடந்த சில நாட்களாக சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அவரது கருத்துக்கள் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இவரது பதிவுகள் குறித்து அதிகமாக புகார்கள் வந்ததால்தான் டுவிட்டர் இந்தியா அவருடைய அக்கவுண்ட்டை சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பயல் ரோஹாட்கி. அந்த வீடியோவில் தன்னுடைய டிவிட்டர் ஆக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதற்கான காரணம் எதையும் டுவிட்டர் இந்தியா தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் டுவிட்டர் இந்தியா யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் நான் உண்மையைத் தான் பேசினேன் என்று மக்களுக்கு எதிராகவும் சமூகத்திற்கு எதிராகவும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் இருந்தும் தனது அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்றும்  தெரிவித்துள்ளார். 

இது குறித்து மக்கள் தனக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram

Why my Twitter Account is SUSPENDED ?????

A post shared by Team Payal Rohatgi (@payalrohatgi) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.