என் டுவிட்டர் அக்கவுண்ட்டை சஸ்பெண்ட் செய்தது ஏன்? பிரபல நடிகை ஆவேசம்

பிரபல நடிகை ஒருவர் தனது ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்தது ஏன் என ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகை பயல் ரோஹாட்கி (Payal Rohatgi) கடந்த சில நாட்களாக சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அவரது கருத்துக்கள் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இவரது பதிவுகள் குறித்து அதிகமாக புகார்கள் வந்ததால்தான் டுவிட்டர் இந்தியா அவருடைய அக்கவுண்ட்டை சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பயல் ரோஹாட்கி. அந்த வீடியோவில் தன்னுடைய டிவிட்டர் ஆக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதற்கான காரணம் எதையும் டுவிட்டர் இந்தியா தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் டுவிட்டர் இந்தியா யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் நான் உண்மையைத் தான் பேசினேன் என்று மக்களுக்கு எதிராகவும் சமூகத்திற்கு எதிராகவும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் இருந்தும் தனது அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்றும்  தெரிவித்துள்ளார். 

இது குறித்து மக்கள் தனக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram

Why my Twitter Account is SUSPENDED ?????

A post shared by Team Payal Rohatgi (@payalrohatgi) on Jul 7, 2020 at 8:32pm PDT

More News

அடக் கொடுமையே இதுவும் போச்சா??? கொரோனா விஷயத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட விஞ்ஞானிகள்!!!

பொதுவாக வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு அந்நோயில் இருந்து மீண்டவரது உடலில் நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் இருக்கும்.

மும்பை, டெல்லி போல் செயல்படுங்கள்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

அரசின் காலதாமதத்தால் பாதிக்கப்படப்போவது மக்களின் உயிர் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி

ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூக்கு வழியாக சென்று மூளையை உண்ணும் அமீபா!!! புதிய நோய்த்தொற்றால் ஏற்பட்ட அதிர்ச்சி!!!

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் தற்போது மூக்கு வழியாக மூளையைச் சென்று தாக்கும் அமீபா நோய்த்தொற்றால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குடிகாரர் செய்த அலப்பறை, பொக்லைன் இயந்திரத்தால் தள்ளிய டிரைவர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் மது அருந்தி அலப்பறை செய்த ஒருவரை பொக்லைன் வாகன டிரைவர் பொக்லைன் இயந்திரத்தால் அந்த குடிகாரர்களை தள்ளி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது