கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பழம்பெரும் அரசியல்வாதி!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழம்பெரும் அரசியல்வாதியும் விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் நடித்த பழ கருப்பையா அவர்கள் இணைந்துள்ளார். மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திமுக அதிமுக உள்பட பல கட்சிகளில் பயணம் செய்த பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா சற்று முன்னர் கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பழ கருப்பையா அவர்கள் ’ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர் தொடங்கி அதிமுக திமுக என மாறி மாறி அரசியல் செய்த நிலையில் மக்கள் நீதி மையம் என்ற நீதியான கட்சியில் நான் இணைந்துள்ளது பெருமைக்குரியதாக இருக்கிறது

தற்போது வளர்ச்சித் திட்டங்கள் நடந்து வந்தாலும் 40 சதவீதம் வளர்ச்சி திட்டங்களுக்கான பணம் ஊழலாக மாறி ஒரு சிலர் கைகளுக்கு போகிறது. இனிமேல் அது முழுவதுமாக மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் இணைந்ததற்கும் என்னை அவர் வரவேற்றதற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்!

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடிவடிக்கையாக,

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம்? கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்!

அகமதாபாத்தில் உள்ள மோதேரா கிரிக்கெட் மைதானத்தை மத்திய அரசு உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாற்றி உள்ளது.

உருவாகிறது புதிய கூட்டணி: கமல்ஹாசன் - சரத்குமார் சந்திப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது

20 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்!

சூர்யா நடிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே.

ஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!

மாகாராஷ்டிரா மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்காக இயக்கப்பட்டு வந்த உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வந்த 98 மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.