ரம்யா பாண்டியனின் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்': பிசி ஸ்ரீராம் பாராட்டு

நடிகை ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் அரசில் மூர்த்தி என்பவர் இயக்கத்தில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியானது. இந்த படத்தை பல திரையுலக பிரமுகர்கள் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரம்யா பாண்டியன் மற்றும் வாணிபோஜன் நடிப்பு மிக சிறப்பாக இருப்பதாகவும் அதே போல் நாயகன் நடிப்பு, அரிசில் கிருஷ்ணமூர்த்தியின் கதை சொல்லும் பாணி மற்றும் திரைக்கதை சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பாராட்டு பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இந்த படத்தை பார்த்து தனது வாழ்த்தையும் பாராட்டையும் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். ’ஒரு எளிமையான கதையை மிகச் சிறப்பாக இயக்குனர் அரசில் மூர்த்தி அவர்கள் மனதில் பதியும்படி தெரிவித்துள்ளார். அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பல திரையுலக பிரமுகர்கள் இந்த படத்தில் குழுவினர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல தயாரிப்பாளர் கேயார் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் அவர்களின் மனைவி திருமதி இந்திரா நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் செல்லும் மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளினி?

விஜய் டிவியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகியின் க்யூட் போட்டோஸ்… வியந்து பாராட்டும் ரசிகர்கள்!

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் “ஏஞ்சல்“ எனும் புது திரைப்படத்தில்

குழந்தைக்காக எதற்கும் துணிந்த தாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மனித உறவுகளில் தாய்மை உணர்வுதான் எப்போதும் வியந்து கொண்டாடப்படுகிறது. காரணம்

ஆண்ட்ராய்ட் யூசரா நீங்கள்?  புது மால்வேர் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு!

ஆண்ட்ராய்ட் செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை புது மால்வேர் ஒன்று தாக்கலாம் என்றும் அதன் வாயிலாக வங்கி விவரங்களை