மெரீனாவுக்கு செல்ல தமிழக அரசு தடை: எத்தனை நாள் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

பொங்கல் பண்டிகையையொட்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பொங்கல் தினத்தில் மெரீனா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் முடிந்த மறுநாளில் இருந்து வார விடுமுறை என்பதால் மெரீனா உள்பட சுற்றுலா தலங்களில் அதிக மக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதாலும், காணும் பொங்கல் தினத்தில் மெரீனாவில் லட்சக்கணக்கானோர் கூட வாய்ப்பு இருப்பதாலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா மட்டுமின்றி வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்காவிலும் மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

More News

விவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: 'வெள்ளை யானை' டிரைலர்!

தமிழ் திரையுலகில் விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே

இளையராஜா இசையில் 'பொன்னியின் செல்வன்': அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் விக்ரம்,

'மாஸ்டர் தி பிளாஸ்டர்': 'மாஸ்டர்' படத்தின் சக்சஸ் பாடல் ரிலீஸ்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 55 கோடி வரை வசூல் செய்தது

டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த நடராஜன்: மேலும் ஒரு தமிழக வீரரும் அறிமுகம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள்

பாலாவை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிய ஷிவானி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஷிவானி மற்றும் சுரேஷ் தவிர அனைவரும் வந்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே