close
Choose your channels

கஞ்சா போதை.. பெண்ணிடம் சில்மிஷம்.. அடித்து உதைத்த பொதுமக்கள்.

Friday, December 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற இளைஞர்களை பொது மக்கள் அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்க பாதை அமைந்துள்ளது. அங்கு பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது கஞ்சா, மது அருந்தி விட்டு மூன்று இளைஞர்கள் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் அப்பெண்ணிடம் மூவரில் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். மற்ற இரு இளைஞர்களும் பெண்ணை சுற்றி நின்று கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் பதற்றமடைந்த பெண் கூச்சலிட்டார். இதைக் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்கள் மூன்று இளைஞர்களையும் பிடித்து அடித்து உதைத்தனர். மூவரையும் பீர்க்கன்கரணை போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், குற்றவாளிகள் படப்பையை சேர்ந்த அலெக்ஸ்(19), செந்தில் குமார்(19), பாலாஜி(19) என்று கண்டறிந்தனர்.
அவர்கள் போதையில் இருந்ததையும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொது இடத்தில் போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு தொந்தரவு செய்பவர்களை ஓரளவுக்குத் தான் பொறுமையாக பொது மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.