close
Choose your channels

கவிழ்ந்த காரின் கண்ணாடியை உடைத்து கைக்குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள்! வைரலாகும் வீடியோ

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித் தவித்த ஏழு மாத கைக்குழந்தை உட்பட தம்பதியை பொது மக்களே காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கூடல்நகர் பகுதியை சேர்ந்த வருண்தாஸ் திருச்சியில் மகப்பேறுக்கு சென்று இருந்த தனது மனைவி ஜான்சி மற்றும் 7 மாத குழந்தையும் அழைத்துக்கொண்டு காரில் மதுரைக்கு திரும்பி உள்ளார். அவர்கள் சென்ற கார், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது காரில் ஒட்டப்பட்டிருந்த இபாஸ் திடீரென காற்றில் பறந்தது. இதனால் காரை ஓட்டிக் கொண்டிருந்த வருண்தாஸ் அந்த இபாஸை பிடிக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து காரின் கண்ணாடியை வெறும் கையாலேயே உடைத்து 7 மாத கைக்குழந்தையை முதலில் மீட்டனர். அதன் பின்னர் காரின் உள்ளே சிக்கியிருந்த இளம் தம்பதிகளையும் மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் காயம் அடைந்த மூவரையும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர் மூவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆம்புலன்ஸ், காவல்துறை வரும்வரை காத்திருக்காமல் பொதுமக்களே விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos