செம்ம கிரியேட்டிவிட்டி… அதிமுகவின் அசத்தும் பிரச்சார விளம்பரங்கள்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள் விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுக வெளியிட்டுள்ள விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

அதிலும் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்று தமிழக அரசு செய்த விளம்பரங்கள் மற்றும் “தொடரட்டும் இரட்டை இலை” என்கிற அதிமுகவின் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைக் குறித்தும் மாநிலத்தின் நீர் மேலாண்மை, நகர்ப்புறச் சீரமைப்பு, சுகாதாரம் போன்ற நிலைமை குறித்து அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு மாற்றங்களை குறித்தும் இந்த விளம்பரங்கள் விரிவாக எடுத்துக் காட்டி வருகின்றன.

இத்தகைய விளம்பரங்கள் பெருவாரியான மக்களை ஈர்த்து இருப்பதாகவும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், மீனவர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலர் இந்தப் பாடல்களின் டோன்களால் ஈர்க்கப்பட்டு காலர் டியூனாக வைத்து இருப்பதாகவும் எதிர்க்கட்சி செய்து வரும் விளம்பரம் இந்த அளவிற்கு மக்களை ஈர்க்கவில்லை என்றும் பொதுவாக கருத்துக் கணிப்பு இருந்து வருகிறது.

இந்த விளம்பரங்களில் எளிய மக்களின் சிரிப்பு, பேச்சு, நகைச்சுவை, துன்பம் போன்றவற்றை அதன் உண்மைத் தன்மை மாறாமல் கொடுத்து இருப்பதால் காணொளியை பார்க்கும் அனைவருக்கும் தங்களையே பார்ப்பது போல் உணர வைக்கிறது. மேலும் விளம்பரங்களின் தரமும் திரைப்படம் போல் உள்ளதால் அவை கவர்ச்சிகரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

More News

முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சை பேச்சு: ஆ ராசாவுக்கு எழுந்த கண்டனமும், அவர் அளித்த விளக்கமும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஒருசிலரின் பிரச்சாரங்கள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்து போல தமிழகம் மாறணுமா...! அதிமுக-வை ஜெயிக்க வைங்க...ராமதாஸ் ...! 

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது என சொல்லலாம்.

நேருக்கு நேர் மோத தயாரா..? ஸ்டாலினை பார்த்து எடப்பாடி காரசாரக் கேள்வி...!

அதிமுக எதுவும் செய்யவில்லை எனக்கூறும் ஸ்டாலின், என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என முதல்வர் பழனிச்சாமி நெல்லையில் பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார். 

அதிமுக இதற்கு அனுமதிக்காது… இது தவறான பிரச்சாரம்… விளக்கும் அதிமுக தரப்பு!

கன்னியாகுமரி பகுதியில் கொள்கலன் (container terminal port) துறைமுகத்தை அதிமுக அரசு அமைக்கப் பேவதாக திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகிறது

இ.பி.எஸ் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைப் பேச்சு… வலுக்கும் எதிர்ப்பு!

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா முதல்வர் இ.பி.எஸ் குறித்து ஆபாசமாக பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.