அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறையினர்களிடம் இந்த தாக்கம் எதிரொலித்தது. இதனால் நேற்று முதல் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெப்சி கோக் உள்பட வெளிநாட்டு பானங்களின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது.
ஒரு மாநிலமே ஒட்டுமொத்தமாக இந்த குளிர்பானங்களை அவர்களாகவே முன்வந்து அருந்துவதை நிறுத்திவிட்டதால் குளிர்பான நிறுவனங்கள் பெரும் நஷ்டமடைந்தன. இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அவர்களை சற்று முன்னர் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ இந்திராநூயி சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த சந்திப்பில் அவர்கள் என்ன ஆலோசனை செய்தாலும் கவலையில்லை, ஒட்டுமொத்த தமிழர்களும் விவசாயிகளின் தண்ணீரை உறிஞ்சி தயாரிக்கப்படும், உடல் நலத்திற்கு தீங்கான இந்த பானங்களுக்கு இனி ஆதரவு தரமாட்டார்கள் என்பது உறுதி.

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

'பாகுபலி 2' சிறப்பு காட்சியில் பிரதமர் மோடி, ராணி எலிசபெத்?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, உலகமே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தயாராகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்திற்கு முதல் பாகத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை. மதுரை தம்பதியினர் மேலும் ஒரு மனு

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த  கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார் என்பதும் தெரிந்ததே. அன்றைய விசாரணையில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீĪ

தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை. மதுரை தம்பதியினர் மேலும் ஒரு மனு

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த  கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார் என்பதும் தெரிந்ததே. அன்றைய விசாரணையில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீĪ

பாஸ்போர்ட் விவகாரம். குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை அவர் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட் அதிகாரி புதுப்பிக்க மறுத்ததை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.