close
Choose your channels

முட்டை ஊழல் விவகாரம்: கமல் குற்றச்சாட்டுக்கு கலெக்டர் பதில்

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமல் நற்பணி மன்றத்தினர் தடுத்து நிறுத்தியதாக வெளிவந்த தகவல்களை சற்றுமுன் பார்த்தோம்.
இதுகுறித்து கமல் ரசிகர்களால் புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில் கமல் இதனை தனது சமூகவலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய சில நிமிடங்களில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அவர்கள் பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாந்தா, மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அழுகிய முட்டைகள் கொடுக்கப்படவில்லை' என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.