close
Choose your channels

மேலும் ஒரு தமிழக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 18 ஆனதால் பரபரப்பு

Thursday, July 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒருசில அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். நேற்று ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் அவரோடு சேர்த்து மொத்தம் 17 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா என்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000ஐ நெருங்கியுள்ள நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.