வெங்காயம் திருடிய நபர்.. கட்டி வைத்து அடித்த வியாபாரிகள்.

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

புதுச்சேரியில் உள்ள சந்தையில் வெங்காயம் திருடிய நபரை அடித்து உதைத்து போலீசில் வியாபாரிகள் ஒப்படைத்தனர்.

குபேர் மார்க்கெட் என்கிற பெரிய மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட மூட்டைகள் அடிக்கடி திருடு போனதால் திருடனை பிடிக்க வியாபாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் சந்தையில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் வெங்காய மூட்டைகளை எடுத்துச் சென்ற முத்தரையர் பாளையத்தை சேர்ந்த காந்திலாலை கையும் களவுமாக பிடித்தனர்.அப்போது அவர், அடிக்கடி இதேபோல் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், அவரை கட்டி வைத்து தாக்கினர். பின்னர் பெரியகடை காவல் நிலையத்தில் காந்திலாலை ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. சிறிய வெங்காயம் கிலோ 170 ரூபாய் வரை விற்பனையாகிறது. துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெங்காய தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவுகிறது. ஆங்காங்கே இது போல வெங்காய திருட்டுக்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 

More News

மருத்துவ செலவிற்கு பணமில்லை: நோயுற்ற மனைவியை உயிரோடு புதைத்த கணவன்

மனைவிக்கு வந்த நோய்க்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது 

இரண்டு வருட பகையை தீர்த்த விராத் கோஹ்லி!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை ஏர்போர்ட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி பட நாயகி!

மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென டான்ஸ் ஆடியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வைரலாகும் வதந்திக்கு விக்ரம் படகுழுவினர் வைத்த முற்றுப்புள்ளி

விக்ரம் நடிப்பில் 'இமைக்காநொடிகள்' அஜய் ஞானமுத்து இயக்கி வரும் 'விக்ரம் 58' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மணிரத்னம்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இயக்கும் படம் குறித்த தகவல்

லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அவர்களுக்கு சமீபத்தில் மலேசிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கியது. இதனை அடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் சென்னையில்