close
Choose your channels

பெண்ணிடம் முத்தத்தை லஞ்சமா பெற்ற போலீஸ்… வசமா சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


 

பெரு நாட்டில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பெண்ணிடம் இருந்து அபராதத் தொகைக்குப் பதிலாக முத்தத்தை லஞ்சமாகப் பெற்று சர்ச்சையில் மாட்டி உள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது கடும் வைரலாகி இருக்கிறது.

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அப்படி பெரு தலைநகர் லீமாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அபராதத்திற்கு பதிலாக முத்தத்தை லஞ்சமாக கேட்டு பெற்றுள்ளார். இது அங்கிருந்த சிசிடி கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி மக்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி பெருவில் கொரோனா விதிமுறைகளை மீறிய பெண் ஒருவர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு உள்ளார். சரி அதற்குப் பதிலாக முத்தம் கொடு என பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அப்பெண்ணிடம் வழிந்து இருக்கிறார்.

அந்தப் பெண்ணும் இதற்கு சம்மதம் தெரிவித்து சாலையில் இருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நின்றுகொண்டு லிப் – லாக் செய்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அந்தப் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.