close
Choose your channels

நீதிமன்ற வழக்கின்போது லைவ்வில் ஓடிய உடலுறவு காட்சிகள்? அதிர்ச்சி சம்பவம்!

Thursday, February 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் தற்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இது ஒரு வகையில் நல்லது என்றாலும் இந்தப் பயன்பாட்டினால் அவ்வபோது சில சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரு நாட்டின் நீதிமன்ற வழக்கில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ஒருவர் வழக்கை முடித்து கொண்டு ஞாபக மறதியாக இருந்து இருக்கிறார். தன்னுடைய ஞாபக மறதியால் தற்போது வேலையை இழக்க வேண்டிய அவலத்திற்கும் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார்.

பெரு நாட்டில் ரோபில்ஸு எனும் வழக்கறிஞர் ஒரு நீதிமன்ற வழக்கில் கலந்து கொண்டார். தன்னுடைய வாதத்தை முடித்துக் கொண்ட அவர் வேலை முடிந்து விட்டது எனக் கருதி ஆன்லைன் தொடர்பை துண்டிக்காமலே ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் லைவ்வாக ஒளிப்பரப்பாகியது. இதனால் வழக்கில் கலந்து கொண்ட நீதிபதிகள் உட்பட அனைவரும் முகம் சுளித்தவாறு வழக்கறிஞரை தொடர்பு கொண்டனர். ஆனால் ரோபில்ஸு செல்போனை சைலண்டில் வைத்து இருந்ததால் அதற்கு வழியில்லாமல் போனது.

இதனால் லைவ் காட்சிகளை பார்க்க விரும்பாத நீதிபதி வழக்கை முடித்து கொள்வதாக அறிவித்து தொடர்பையும் துண்டித்து விட்டார். இச்சம்பவத்தால் தற்போது வழக்கறிஞர் கடும் சிக்கலில் மாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவரது லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அர்ஜென்டினாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எம்.பி ஒருவர் தவறுதலாக ஆன்லைன் வசதியை அணைத்து வைக்காமலே தோழியோடு உடலுறவு வைத்துக் கொண்டார். ஆனால் இந்தக் காட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றக் கூட்டத் தொடராக அந்நாட்டின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.