தெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: இணையத்தில் கலக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,May 26 2019]

இணையத்தில் வெளியான வைரல் வீடியோ ஒன்றால் தெருவிளக்கில் படித்த ஒரு சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்து அந்த ஏழைச்சிறுவனின் வாழ்க்கையே ஒரே நாளில் மாறியுள்ளது.

பெரு நாட்டில் விக்டர் மார்ட்டின் என்ற சிறுவன், தன்னுடைய வீட்டில் மின்சார வசதி இல்லாத காரணத்தால் தெருவிளக்கில் வீட்டுப்பாடம் எழுதி படித்து வந்தான். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோவை மில்லியன்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில் இந்த வீடியோ பெரு நாட்டின் கோடீஸ்வரர் யாசுஃப் அஹ்மத் என்பவரும் பார்த்து, அந்த சிறுவனுக்கு உதவ முன்வந்தார்.

சிறுவனின் படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானே பொறுப்பேற்பதாக அறிவித்த யாசுஃப் அஹ்மத், அவருடைய தாயாருக்கும் வேலை கொடுத்தார். அதுமட்டுமின்றி சிறுவன் படித்த பள்ளிக்கு விளையாட்டு மைதானத்திற்கு தேவையான வசதிகள் உள்பட பல உதவிகளையும் செய்வதாக அறிவித்தார்.

மேலும் அந்த சிறுவனுடன் தெருவிளக்கில் யாசுஃப் அஹ்மத் அவர்களும் உட்கார்ந்து படிப்பது போன்றும், மைதானத்தில் சிறுவனுடன் யாசுஃப் அஹ்மத் கால்பந்து விளையாடும் வீடியோவும் தற்போது வலம் வரத்தொடங்கிவிட்டது. ஒரே ஒரு வீடியோ ஒரு சிறுவனின் வாழ்க்கையை தலைகிழாக மாற்றியது மட்டுமின்றி அவன் படித்த பள்ளிக்கும் எதிர்பாராத பல உதவிகள் கிடைத்துள்ளது. இணையம் என்பது இந்த தலைமுறையினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும் இதனை சரியாக பயன்படுத்தினால் எதிர்பாராத அதிசயங்கள் பல நடக்கும் என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது.

More News

'கசடதபற' படத்தில் 5 ஹீரோ, 3 ஹீரோயின்கள் அறிவிப்பு!

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கசடதபற' திரைப்படத்தில் ஆறு கதைகள் இருப்பதாகவும், இந்த படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள்,

காஞ்சனா இந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம்! ராகவா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தமிழில் சூப்பர்ஹிட்டான 'காஞ்சனா' திரைப்படத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ் இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருந்தார் என்பதும், 'லட்சுமி பாம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த

உறவுக்கார பெண்ணுடன் நிச்சயதார்த்தமா? சிம்பு விளக்கம்

நடிகர் சிம்புவுக்கு அவரது தாயார் உறவுக்கார பெண் ஒருவரை பார்த்துள்ளதாகவும், அந்த பெண்ணுடன் சிம்புவின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருப்பதாகவும்

டி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டுமே 23 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது

இனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி!

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் இந்த மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.