சாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

 

பெரு நாட்டில் நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவர் தான் இறக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளார். அந்நாட்டு சட்டப்படி கருணைக் கொலை செய்வது குற்றமாகும் என்பதால் இந்த வழக்கின் வெற்றி புது திருப்பமாகப் பார்க்கப் படுகிறது.

அனா எஸ்ட்ராடா எனும் 44 வயதே ஆன பெண் ஒருவர் பல ஆண்டு காலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இனி உடல்நலம் பெறுவதில் நம்பிக்கையே இல்லாத அந்தப் பெண்மணி கருணைக் கொலை செய்துவிடுமாறு மருத்துவர்களிடம் கோரி உள்ளார். ஆனால் சட்டப்படி இது குற்றமாகும் என்பதால் மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அப்பெண், தான் கருணை கொலை செய்யப்படுவதை அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “கண்ணியமான மரணத்திற்கு உரிமை உண்டு” என தீர்ப்பு அளித்து உள்ளனர். இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று அந்நாட்டு அரசாங்கமும் இப்பெண்ணின் கருணைக் கொலை உத்தரவுக்கு இசைவு அளித்து உள்ளது. இதையடுத்து கருணைக் கொலை தீர்ப்பு பெரு நாட்டில் புது திருப்பமாக அமையும் எனப் பலரும் கருதி வருகின்றனர்.

More News

நம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்

எஸ்ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

மீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி அகமதாபாத் மைதானத்தில் பங்கேற்று விளையாடி வருகிறது.

அடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னர் ஆரி 'அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

பும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரல்? அந்த ரகசியம் இதுதான்…

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

நடிகர் அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் நடித்த 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து உள்ளன