close
Choose your channels

ஐஐடி மெட்ராஸ் அழிந்தால் என்ன...? பீட்டர் அல்போன்ஸ் காட்டம்...!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாதிபேதமற்ற கல்வியை முடியாத IIT மெட்ராஸ் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என, பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.

நம் நாட்டில் மாபெரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி கருதப்படுகிறது. இங்கு பணிபுரிய வேண்டும் என்றும், படிக்கவேண்டும் என்பதும் பலரின் கனவாகவே இருந்து வருகிறது. இதனால் பல போராட்டங்களை கடந்தும், இங்கு கல்வி பயில மாணவர்கள் வந்து சேர்கிறார்கள். ஆனால் இங்கோ வர்க்கம், மதம் என்பதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதும், ஒடுக்குமுறை நடப்பதும், ஜாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும், இங்கு பணிபுரியவும், கல்வி கற்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியருக்கு கொடுமை :

கணிதமேதை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள், உயர்ந்த சாதியினராக இல்லாததால், அங்கு பணிபுரிந்த அனைத்து வருடங்களும் அவருக்கு கொடுமை நடந்துள்ளது. இந்த அராஜகங்கள் எல்லாம் 90- களில் தான் நடந்தேறியுள்ளது. இதற்காக வசந்தா அவர்கள் கடுமையாக சட்டரீதியாக போராடி, தனக்கான நீதியைப்பெற்றார்.

மாணவி மரணம்:

சென்ற 2 வருடங்களுக்கு முன்பு கேரள மாணவி பாத்திமா லத்தீப் இறந்த செய்தி, இந்தியாவையே உலுக்கிப்போட்டது. ஜாதி, மத காரணங்களால் இங்கு மாணவர்கள் ஒடுக்கப்படுவதும், அதனால் நடக்கும் மாணவர்களின் தற்கொலை மரணங்களும் பெரும்பாலும் வெளியில் தெரிவதேயில்லை.

விபின் கடிதம்:

ஜாதி ரீதியான பாகுபாடுகளை, அதிகளவில் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதால், இங்கு பணிபுரியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பணியில் இருந்து விலகுவதாக இ மெயில் மூலம், ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் உதவிப் பேராசிரியரான விபின் . தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உன்னிகிருஷ்னன் இறப்பு:

இதற்கிடையே நேற்று ஐஐடி மைதானத்தில், அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த 30 வயதுடைய உன்னிகிருஷ்ணனின் உடல்தான் அது. இவரின் தந்தை இஸ்ரோவில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த ஏப்ரலில் பிடெக் முடித்த இவர், புராஜக்ட் அசோசியேட் மற்றும் பகுதி நேர பேராசிரியராக ஐஐடியில்வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வேளச்சேரியில் உள்ள அவர் தங்கியுள்ள அறையை சென்று பார்த்த போது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 11 பக்கங்கள் அந்த கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் இது கொலையா...? தற்கொலையா...? என்ற நோக்கில் கோட்டூர்புரம் காவல்துறையினர் , சட்டப்பிரிவு 174ன்கீழ், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸ் டுவீட் :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான
பீட்டர் அல்போன்ஸ் இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

"இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் பயிலும் ஐஐடி மெட்ராஸில் ஜாதி வெறி என்பது பெரும் அவமானம், கல்வி என்பது பட்டங்கள் மட்டுமல்ல. அது ஒரு விசால பார்வை. விஞ்ஞான அணுகுமுறை. அதை தர முடியாத ஐஐடி இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?" என்று காட்டமாக பேசியுள்ளார்.

ஐஐடி-யில் நடக்கும் மரணங்கள் மர்மமாகவே இருப்பதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பலரும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என கடுமையான விளாசி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.