கமல் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனு

  • IndiaGlitz, [Tuesday,March 21 2017]

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பேட்டியில் அவர் தெரிவித்த ஒரு கருத்துக்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், மகாபாரதத்தை கமல்ஹாசன் அவதூறாகப் பேசியதாகவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்னும்சில நிமிடங்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. ஏற்கனவே இதே காரணத்துக்காக கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அமைப்பு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய ஜியோ

சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் உலக அளவில் மாபெரும் சாதனை புரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக இந்திய திரைப்படங்களில் வேறு எந்த படத்தின் டிரைலரும் நெருங்க முடியாத அளவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது...

சேம் சைடு கோல் போட்ட நிர்மலா பெரியசாமி. வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி காட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தாலும், சசிகலா அணியில் உள்ள பலர் இன்னும் ஓபிஎஸ் அவர்களின் மறைமுக ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள் என்றும் சரியான சமய சந்தர்ப்பத்தில் அவர்கள் அணிமாறுவார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த கருத்து உண்மை என்பதை சமீபத்தில் நடந்த நட்சத்திர பேச்சாளர்கள் ஆல

திறமையின் ஒட்டுமொத்த உருவம் தான் அஜித். காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றவர் நடிகை காஜல் அகர்வால்...

'தளபதி 61' குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் முதல்கட்ட படபிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது...

இளையராஜா குரல் கொடுப்பது யாருக்காக?

கட்ந்த சில நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் இளையராஜா-எஸ்பிபி பிரச்சனை குறித்துதான் விவாதித்து வருகின்றனர். ஒரு தனியார் தொலைக்காட்சி இதுகுறித்து நேற்று ஒரு விவாதமே நடத்திவிட்டது. இளையராஜா, எஸ்பிபி இருவருமே திரையுலகில் எந்த அளவுக்கு நேர்மையானவர்கள் என்பதும், இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பதும் க&#