close
Choose your channels

'பிகில்' படம் மீது வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றம் சென்று பிரச்சனையை சந்தித்த பின்னரே ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே ‘பிகில்’ படத்திற்கு இனி பிரச்சனை இருக்காது என்றே படக்குழுவினர் கருதினர்

இந்த நிலையில் உதவி இயக்குனர் செல்வா மீண்டும் தற்போது சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனால் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் இதுகுறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு படக்குழுவினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது

‘பிகில்’ திரைப்படம் நேற்று சென்சார் ஆகி, வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட்டில் இந்த படம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.