பெட்ரோல்-டீசல்: மே 1 முதல் தினசரி விலைமாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலைமாற்றத்தை தினசரி கச்சா எண்ணெயின் அடிப்படையில் மாற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு வரும் மே 1 முதல் தினசரி அன்றைய கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினசரி சர்வதேச விலையை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வரிசையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

26 வருடங்களுக்கு பின் ராஜ்கிரணுடன் மீண்டும் மோதும் பி.வாசு

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

'தல' தோனியை அவமதித்த புனே அணி உரிமையாளரின் சகோதரருக்கு சாக்சி கொடுத்த பதிலடி

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அதே புகழுடன் உள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவர் புனே அணியில் விளையாடி வருகிறார்...

மக்கள் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்காது - மயில்சாமி

திருப்பூரில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அறவழியில் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய தமிழக கவர்னரிடம் திமுக தலைவர்கள் மனு

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை திமுக தலைவர்கள் இன்று மும்பையில் சற்றுமுன்னர் நேரில் சந்தித்தனர்...

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்...