வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை! கண்ணீர் வடிக்கும் வாகன ஓட்டிகள்!

  • IndiaGlitz, [Friday,January 22 2021]

சாமானிய மக்களின் அன்றாட தேவையில் ஒன்றாகவே பெட்ரோல், டீசல் போன்ற கச்சாப் பொருட்கள் மாறிவிட்டன. அதுவும் பொதுப் போக்குவரத்து இல்லாத கொரோனா காலத்தில் பெட்ரோலின் பயன்பாடு சாமானிய மக்களின் மத்தியில் அதிகரித்து விட்டது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பெட்ரோல்-டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை சந்தித்து உள்ளன. டெல்லியில் இன்று பெட்ரோல்-டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு மீண்டும் 25 பைசா உயர்த்தி உள்ளன. இதனால் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.85.45 காசாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசலின் விலை ரூ.75.63 காசாக அதிகரித்து உள்ளது.

மும்பையில் இந்த அளவைவிட உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.92.04 காசாக விற்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களில் 3 ஆவது முறையாக பெட்ரோல் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 18 ஆம் தேதி லிட்டருக்கு 25 காசு உயர்த்தப்பட்டு தற்போது மீண்டும் டெல்லியில் ஒரு லிட்டருக்கு 25 காசு வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை ஏற்றத்தால் கடந்த வாரம் டெல்லியில் ரூ.84.95 காசுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 85.45 காசாக உயர்ந்து இருக்கிறது.

மேலும் மும்பையில் இந்த விலை ஏற்றத்தினால் ரூ.1.56 காசு அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.92.04 காசாக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87.85 காசாகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.87.67 காசாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்றைய விலையை விட 22 காசுகள் உயர்ந்து இன்று ரூ.88.07 காசாக அதிகரித்து உள்ளது. அதேபோல டீசல் 23 காசுகள் உயர்ந்து ரூ.80.90 காசாக விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இப்படி செய்யலாமா? வருத்தத்துடன் 'குக் வித் கோமாளி' பவித்ரா பதிவு செய்த வீடியோ!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'சூரரை போற்று' படத்தை முந்திய பொங்கல் ரிலீஸ் படம்! டிஆர்பியில் சாதனை!

'சூரரை போற்று' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பானது

காதல் மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல இயக்குநர்… வைரலாகும் குடும்ப புகைப்படம்!!!

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவரது காதல் மனைவி நடிகை குஷ்பு மற்றும் மகள்களுடன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்

5 நிமிடத்தில் எப்படி சாத்தியம்? 18 வயது இளைஞரை பார்த்து அசந்த பிக்பாஸ் சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் ரசிகர்களால் 'சுரேஷ் தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்பட்டார் என்பதும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிற்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது