தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்மை குறையுமா? தொடரும் சந்தேகத்திற்கு பதில்!


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஆண்மை குறைபாடோ அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கையில் மாற்றமோ ஏற்படாது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறோம். இதற்கு ஒரே தீர்வாக கொரோனா தடுப்பூசி மட்டுமே நம்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த எதிர்மறையான சந்தேகங்களை சிலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஃபைசர், மாடர்னா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும்போது ஆண்மை குறையும் எனவும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் வதந்தி கிளம்பியது.

இதையடுத்து அமெரிக்க விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளைத் தற்போது JAMA ஆய்விதழில் வெளியிட்டு உள்ளனர். அந்த முடிவில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாது எனவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த ஆய்விற்காக 18-50 வயது வரையுள்ள தன்னார்வலர்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களின் விந்தணுக்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசியை மக்கள் எந்த பயமும் இல்லாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.

More News

பப்ஜி பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… கூகுள் ப்ளே ஸ்டோரில் புது வரவு!

பப்ஜி கேமை உருவாக்கிய தென் கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் நிறுவனம் தற்போது இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா” எனும் கேமை அறிமுகப்படுத்தி உள்ளது.

கின்னஸ் முயற்சியில் பைக் சாகச வீரர் உயிரிழப்பு… வீடியோ வெளியிட்டு கதறும் நெட்டிசன்ஸ்!

பைக் ரேஸில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையைத் தானே முறியடிக்க நினைத்து இருக்கிறார்.

சாம்பலாகும் மதன் சாம்ராஜ்யம்....! கோபப்பட்ட குமாருக்கு போலீஸ் நச் பதில்....!

கைது செய்த பப்ஜி மதனை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

பாபாவுக்கு ஜால்ரா போட்ட சேவகிகள்....! கூண்டோடு அள்ளிய போலீஸ்....!

சிவசங்கர் பாபா சிறுமிகளுடன் தவறாக நடக்கவில்லை என்று சுஷில் ஹரி பள்ளியை சார்ந்த ஆசிரியைகள் கூறிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு முன் என் தந்தை கைகட்டி நின்றார்: கமல்ஹாசன்

அரசியல்வாதிகளில் நேர்மைக்கும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளவர் யார் என தற்போதைய அரசியல்வாதிகளை கேட்டால் கைவிரலில் எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள்.