close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படக்குழுவினர் திடீர் கைது: என்ன காரணம்?

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்து வரும் ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ரிப்பன் பில்டிங், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகிய பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டு இருந்தது. ஆனால்,அனுமதி இன்றி உயர் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு நடத்துவதை போலீசார் கண்டறிந்து அதன் பிறகே படக்குழுவினர்களை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’பிச்சைக்காரன் 2’ பட குழுவில் ட்ரோன்களை இயக்கிய நவீன் குமார், சுரேஷ், ரூபேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் திடீரென ட்ரோன் மூலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.