பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை

கேரள மாநில விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ்குமார் என்பவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கவிருப்பதாகவும் அவருடைய உறவினர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். இரண்டு வாரங்களில் பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமலேயே விமானி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர்களை சோக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 149 பேர்கள் காயமடைந்ததாகவும், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிகிச்சை பெற்று வரும் 22 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்

இந்த நிலையில் இந்த விமானத்தை ஓட்டிய கேப்டன் சாதே மற்றும் இணைவிமானி அகிலேஷ் குமார் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் இணை விமானி அகிலேஷ்குமாரின் மனைவிக்கு, இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கவிருப்பதாக அவருடைய உறவினர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த உறவினர் மேலும் கூறியபோது, ‘அகிலேஷ் குமார் மிகவும் பணிவான, கண்ணியமான, நல்ல நடத்தை உடையவர்.

அவரது மனைவிக்கு அடுத்த இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2017 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார், கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு கடைசியாக வீட்டிற்கு வந்திருந்தார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

More News

கொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன? அமிதாப் பரபரப்பு டுவீட்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்

தஞ்சை மருத்துவமனை விவகாரம்: ஜோதிகாவின் பாராட்டுக்குரிய செயல்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அந்த மருத்துவமனை பராமரிப்பு சரியில்லாமல்

சமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு!!! திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பயங்கரச் சதித்திட்டங்கள் தீட்டப்படுகிறது என்ற கருத்தை வலுவாக நம்பி, அப்படியான கருத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதித்து

கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே!!! பதற வைக்கும் விபத்து பின்னணி!!!

நேற்று துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது 35 அடி தாழ்வான பள்ளத்தில் விழுந்ததால்

தங்கக்கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வரிடம் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தாரா??? என்ஐஏவின் அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவையே புரட்டிப்போடும் விதமாக கடந்த மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு பார்சல் வந்தது.