close
Choose your channels

பிங்க் ரீமேக் கதாநாயகனை அழைத்துவர சிறப்பு விமானம்: பரபரப்பு தகவல் 

Thursday, February 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ’நேர்கொண்டபார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் தல அஜித் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பிங்க்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அமிதாப் நடித்த வேடத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசியலில் பிஸியாக உள்ள பவன்கல்யாண் தற்போது மீண்டும் ‘பிங்க்’ ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்களிடம் இருந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அவர் வெறும் 20 முதல் 30 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூபாய் 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திற்கு அவரை வீட்டிலிருந்து அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வாடகை தொகையே ஒரு பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் இதுவரை எந்த ஒரு நடிகரையும் படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதும் அந்தப் பெருமை முதன்முதலாக பவன் கல்யாண் கிடைத்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.