close
Choose your channels

இதைவிட கீழ்த்தரமான அரசாங்கத்தை பார்க்கவே முடியாது: கொந்தளித்த பியூஷ் மனுஷ்

Tuesday, May 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒட்டு மொத்த தமிழர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம தெரிவித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஆவேசமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

தூத்துகுடி மக்களும், தமிழக மக்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி ரத்தம் சிந்தி வருகின்றனர். ஆனால் ஸ்டெர்லைட் ஓனர் அனில் அகர்வால் லண்டனில் எந்தவித பிரச்சனையும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். ஆட்சியாளர்கள் சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். சுற்றுச்சூழல் பிரச்சனையால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை.

இத்தனை நாட்கள் மக்கள் அமைதியாக போராடி வருகின்றார்களே! உங்களுக்கு காது செவிடா? தயவு செய்து மக்களை தூண்டி விடாதீர்கள். ஒரு சதவீத தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டாம். இந்த நாட்டில் 70% விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள். முடியவில்லை என்றால் பதவி விலகிவிடுங்கள்

இதைவிட கீழ்த்தரமான ஒரு அரசாங்கத்தை இனிமேல் பார்க்கவே முடியாது. மக்களிடம் வரிப்பணம் வாங்கி போலீசுக்கு சம்பளம் கொடுத்து அந்த மக்களையே அடிக்க சொல்கிற அரசை எங்கேயாவது பார்த்ததுண்டா? போலீஸ் எல்லாம் நம் மக்கள் தான். சுற்றுச்சூழலுக்காக மக்கள் போராடத்தான் செய்வார்கள். திருந்தவேண்டியது ஆட்சியாளர்கள்தான் என்று ஆவேசமாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.