close
Choose your channels

ஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்!

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பிரபல நடிகையின் மொபைல் நம்பரை ஆபாச தளத்தில் பதிந்த பீட்சா டெலிவரி பாய் செய்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி ராவ், இவர் சென்னையில் வசித்து வரும் நிலையில் கடந்த 9ம் தேதி ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். இந்த பீட்சாவை டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் பரமேஸ்வரன் என்பவர் அவ்வப்போது காயத்ரி ராவ்வை மொபைல் போனில் அழைத்து அவருடைய வீடு இருக்கும் இடம் குறித்து பேசியுள்ளார்

இந்த நிலையில் பீட்சா டெலிவரி செய்யும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த டெலிவரி பாய் பரமேஸ்வரன், காயத்ரி ராவ் மொபைல் எண்ணை ஆபாச தகவல்கள் பகிர்ந்து கொள்ளும் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து நடிகை காயத்ரிக்கு ஆபாச அழைப்பு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது டெலிவரி பாய் பரமேஸ்வரன் தான் நடிகையின் மொபைல் எண்ணை ஆபாச தளங்களை பகிர்ந்து கொள்ளும் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தது தெரியவந்தது. மேலும் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து பரமேஸ்வரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது ஆபாச தளத்தில் நடிகையின் மொபைல் எண்ணை பகிர்ந்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் பரமேஸ்வரனை பீட்சா நிறுவனம் வேலையிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.