close
Choose your channels

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்கள்!

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியபோது ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஒருசில முக்கிய வேண்டுகோள்கள்களையும் விடுத்துள்ளார். அவை பின்வருவன:

1.வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

2.சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

3. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. "ஆரோக்கிய சேது" மொபைல் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

5 ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

6. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை மரியாதையுடன் நடத்தவும்.

7. மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது என்றும் ஒருசில தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.