லைட்டை ஆஃப் பண்ணிட்டு தீபம் ஏற்றுங்கள்: பிரதமர் மோடி உரை

  • IndiaGlitz, [Friday,April 03 2020]

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையிலும் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இந்தியாவில் இதுவரை 2069 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கொரோனா பாதிப்பு குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அவர் அதில் கூறியதாவது:

மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி.

கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். இன்று 10-வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். வீட்டில் இருந்தாலும் நாம் ஒவ்வொருவருடனும் 130 கோடி இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. கொரோனா தொடர்பாக இந்தியா எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே உற்று பார்த்து வருகிறது

ஏப்ரல் 5 ஞாயிறன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு, பால்கனிக்கு வந்து டார்ச் லைட் அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அல்லது செல்போனில் 9 நிமிடங்கள் வெளிச்சம் ஏற்படுத்தலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

More News

வாசனை மற்றும் சுவை உணர்வை இழத்தல் கொரோனா அறிகுறியா??? ஆய்வு முடிவுகள்!!!

கொரோனா அறிகுறிகளாக இதுவரை வறட்டு இருமல், சளி, காய்ச்சல் போன்றவையே

தமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா: இந்தியாவில் 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு

டெல்லியில் மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்

அமேசான் காட்டையும் விட்டு வைக்காத கொரோனா: பழங்குடியின பெண்ணையும் தாக்கியதால் பரபரப்பு 

உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி, இதுவரை உலகம் முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்ததே.

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன

சென்னை பீனீக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17 வரை சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது