லடாக்கில் திடீர் விசிட்: கெத்து காட்டிய பிரதமர் மோடி

இந்தியா சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் பல உயிர்கள் பலியானதாக கூறப்பட்டாலும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை.

இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இன்று லடாக்கில் நேரில் சென்று இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென நேற்று அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை திடீரென லடாக் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ஆய்வு செய்து வருகிறார். மேலும் ராணுவ தலைமை தளபதி அவர்களும் பிரதமருடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக லடாக் பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டு வரும் நிலையில் திடீரென பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு சென்று இராணுவ வீரர்களை நேரில் என்று தைரியமூட்டி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லடாக் பகுதியில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி உட்கார்ந்து இருக்கும் கெத்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா வைரஸை தடுக்க முகக்கவசம் போல இதுவும் ரொம்ப முக்கியம்!!! FDA வின் புதிய அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எப்படி பரவும்? பொருட்களின் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

அதிபர் ட்ரம்புக்கு டஃப் கொடுக்கும் ஜோ பிடன்!!! அமெரிக்க அரசியலில் தொடரும் பரபரப்பு!!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மியான்மரில் வேலை செய்துகொண்டிருந்த 100 தொழிலாளர்கள் பலி!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் என்ற பகுதியில் மாணிக்கக் கற்களை தோண்டி எடுக்கும் ஒரு பிரபலமான சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

இன்ஸ்டா இளம்பெண்களை குறிவைத்த இம்சை இளைஞர்கள்: கோடிக்கணக்கில் மோசடி

இன்ஸ்டாகிராமில் இருக்கும் பணக்கார இளம் பெண்களை குறிவைத்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்த இளைஞர்கள் கூட்டம் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி மகளின் லாக்டவுன் வொர்க்-அவுட்: வைரலாகும் புகைப்படங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்பு ஏதும் இல்லை என்பதும் இதனால் திரையுலகினர் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே.