திடீரென காலியான பிரதமர் மோடியின் 'வெய்போ' அக்கவுண்ட்: என்ன காரணம்?

சீனாவின் ‘வெய்போ’ என்ற சமூக வலைதளம் டுவிட்டருக்கு இணையானது என்பதால் அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தனது அக்கவுண்ட்டை தொடங்கினார். பிரதமர் மோடி ‘வெய்போ’ அக்கவுண்ட் தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள் அவருக்குக் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அக்கவுண்ட்டில் அவர் சீனப் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது உள்பட முக்கிய போஸ்டுகளை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீன இந்திய ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக இந்திய சீன உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் ‘வெய்போ’ அக்கவுண்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து போஸ்ட்களும் டெலிட் செய்யப்பட்டதாகவும் தற்போது அவரது அக்கவுண்டில் இரண்டு போஸ்ட்களை தவிர வேறு எதுவும் இல்லை என்றும், ‘வெய்போ’ அக்கவுண்டில் பிரதமர் மோடியின் புரொபைல் பிக்சரும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

பிரதமர் மோடி தனது வெய்போ அக்கவுண்டில் இதுவரை 115 போஸ்டர்களை பதிவு செய்திருந்தார். ஆனால் அதில் 113 போஸ்ட்கள்டெலிட் செய்யப்பட்டதாகவும் சீன அதிபர் ஜின்பிங் உடன் எடுத்துக் கொண்ட இரண்டு போஸ்ட்கள் மட்டுமே தற்போது அதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபரின் புகைப்படம் உள்ள போஸ்ட்களை எளிதில் டெலிட் செய்ய முடியாது என்பதால் அந்த இரண்டு போஸ்ட்கள் மட்டும் உள்ளன என்பது கூறப்படுகிறது.

மேலும் ‘வெய்போ’ அக்கவுண்டில் இருந்து பிரதமர் மோடி இன்னும் ஒரு சில நாட்களுக்குள் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து!

டிக் டாக்கில் புகழ் பெற்ற இலக்கியா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச பதிவுகளை டிக்டாக்கில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே.

காரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

உலகின் வயதான ஹீரோ என்ற புகழ்பெற்ற நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த 'தாதா 87' என்ற திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மது கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில்

தமிழகம் முழுவதும் மூடப்படுகிறது டாஸ்மாக்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 5வது நாளாக 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

சாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்

சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலர்