போயிடுவேன்னு நினச்சீங்களா.. அது, மகளிர் தினத்துக்கான சிறப்பு பதிவு..! நரேந்திர மோடி.

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

மார்ச் 8-ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தை மகளிர் தினத்துக்காக பெண்கள் நிர்வகித்துக்கொள்ளலாம் என்று மோடி, சமூக வலைதளத்தில் இருந்து விலகப்போவதாக சொன்னதற்கான சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.

பிரதமர் மோடி தான் அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் விலகி இருப்பது பற்றி தான் யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

இது எந்த விதமான அறிவிப்பு என நெட்டிசன்கள் பல்வேறு விதமான யோசனை கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒருவேளை இந்திய மக்கள் முழுவதுமாக சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை வரலாம் என ஒரு தரப்பினரும்.. இந்த சமூக ஊடகத்தால் நாம் பல கோடி ரூபாய் வருவாய்களை அந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறோம். நமது பிரதமர் தனது தொலைநோக்கு சிந்தனையால் யோசித்து அதை குறைக்க இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சிலரும் கூறி வந்தனர்.மேலும் அவரது ஆதரவாளர்கள் #Nosir போகாதீர்கள் என ட்ரெண்ட் செய்து வந்திருந்தார்கள்.

ஹிஸ்டரி ஆஃப் இந்தியா எனும் ட்விட்டர் பயனாளர் இன்டர்நெட் பயன்படுத்த போவதில்லை என்றால் மோடி காஷ்மீருக்குள் நுழைய போகிறாரா..?! என்று கிண்டலாக டிவீட் செய்திருந்தார். கடந்த 7 மாதமாக காஷ்மீர் மக்கள் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இது மிகப் பெரிய கருத்துரிமை பறிப்பு என பல ஜனநாயக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னொரு நபர், இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு போல் மோடியின் இந்த டிவீட்டுக்கு நன்றி சொல்லி இனிமேலாவது என் மீது பழி போடாமல் உங்களுடைய வேலையில் சிறப்பாக செயல்படுங்கள் என டிவீட் போட்டிருந்தார்.

இந்நிலையில் மோடி தான் சமூக வலைத்தளத்திலிருந்து விலகப்போவதில்லை என்றும் மகளிர் தினத்திற்கு என சிறப்பு நிகழ்ச்சியாக பெண்கள் தனது டிவிட்டர் அக்கவுண்ட்டை ஒருநாள் உபயோகித்துக்கொள்ளலாம் என இன்று தெரிவித்துள்ளார்.

More News

புத்திசாலித்தனத்தால் திருடனை விரட்டி அடித்த இளம் பெண்..! வீடியோ.

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது புத்தி சாதுரியத்தால் திருடனை விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்.. நொய்டாவில் இரண்டு பள்ளிகள் மூடல்..!

டெல்லியில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் குழந்தை நொய்டாவில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில் படித்து வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டியுள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய இளைஞர்! அதிர்ச்சி வீடியோ

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார்.

மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் படத்தை பார்த்த திமுக தலைவர்!

ஜீவா நடிப்பில் பிரபல இயக்குநரும் எழுத்தாளருமான ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஜிப்ஸி. மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் சென்சாரில் சிக்கி, அதன்

3 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? கமல்ஹாசன் பேட்டி

சமீபத்தில் நடந்த 'இந்தியன் 2' விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில்