தவறான மனிதர்களை அடையாளம் காட்டிய காலச்சூழல்: ரஜினி குறித்து பாமக ராமதாஸ்

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

நேற்று தூத்துகுடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட வேண்டாம் என்றும், போராடும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், போராட்டத்தின் இடையே சமூக விரோதிகள் ஊடுருவினால் அது கலவரமாக வெடிக்கும் என்றும் கூறினார். ஆனால் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ரஜினி கூறியதை 'அவர் போராட்டமே கூடாது என்று கூறியதாகவும், போராட்டம் செய்த அனைவருமே சமூக விரோதிகள் என்று கூறியதாகவும் திரித்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தமிழகத்தில் போராட்டங்களே கூடாது. போராட்டங்களை ஜெயலலிதா போல இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியது பாசிசத்தின் உச்சம். தவறான மனிதர்களை சரியான நேரத்தில் அடையாளம் காட்டியதற்காக காலச்சூழலுக்கு தமிழக மக்கள் நன்றி கூற வேண்டும்! என்று கூறியுள்ளார்.

வழக்கம்போல் ராம்தாஸ் அவர்களின் இந்த டுவீட்டுக்கும் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் சமீபத்தில் பாமகவின் காடுவெட்டி குரு மரணம் அடைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது குறித்தும் டுவிட்டர் பயனாளிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹாலிவுட் இயக்குனருடன் அரவிந்தசாமி ஒப்பிட்ட இளம் இயக்குனர் யார் தெரியுமா?

இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் பதினாறு' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய படமான 'நரகாசுரன்' படத்தின் நாயகனாக அரவிந்தசாமி நடித்தார்.

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் திடீர் முற்றுகை: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துகுடிக்கு சென்று அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் போராட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

'யார் நீங்க' என்று ரஜினியை கேட்டது ஏன்? தூத்துகுடி வாலிபர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி கேட்டது

போராடிதான் ஒவ்வொரு உரிமையையும் பெற முடியும்: ரஜினி இயக்குனர் ரஞ்சித் பேட்டி

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில்

டுவிட்டரில் ரஜினியை கிண்டலடித்தாரா சித்தார்த்?

தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் பேட்டியளித்த போது, 'தூத்துகுடியில் சமூக  விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம்