உதயநிதி ஸ்டாலின் கைது..!

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சைதாப்பேட்டை சந்திப்பு பகுதியில் முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர், பின்னர் அண்ணா சாலையில் பேரணியாக சென்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதையடுத்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர். உதயநிதி உள்ளிட்டோர் ஏற்றப்பட்ட வாகனத்தை முன்னோக்கி செல்லாதபடி திமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல எதிர்ப்பு அலைகள் கிளப்பியுள்ளன. அஸ்ஸாமில் மாணவர்கள் மற்றும் போது மக்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றதால் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

 

More News

இரண்டாவது கணவனை பிரிந்து முதல் கணவனின் மச்சினனுடன் 'தொழில்' செய்த சென்னை இளம்பெண் கைது!

முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து முதல் கணவரின் மச்சினனுடன் நட்புடன் பழகி வரும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர்

ரயில் தண்டவாளத்தில் குடும்பத்துடன் அமர்ந்து தற்கொலை: திண்டுக்கல் அருகே பரபரப்பு!

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அம்மாவின் கனவை நனவாக்குவேன்: மறைந்த நடிகையின் மகள் பேட்டி

இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த 'சின்ன வீடு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவர் பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது 

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா அறிவித்துள்ள அசத்தலான அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி

நித்தியானந்தாவின் 'கைலாஷ்' நாட்டிற்கு எஸ்.வி.சேகர் பிரதமரா?

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இம்மாதம் 18-ம் தேதிக்குள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அறிவிக்க வேண்டும்