சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து இன்று முதல் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் ஒரு சில கூடுதல் தளர்வுகள் இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவரகள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னையில் பொதுவெளியில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதி அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பேரிடர் மேலாண்மை சட்டம் அமலில் உள்ளதால் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஐந்து பேருக்கு மேல் பொதுவெளியில் கூடக்கூடாது என்ற கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்துள்ளதால் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

6 வயது சிறுவன் படுகொலை: சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தில் சிறுவனின் சகோதரி கூறிய திடுக்கிடும் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி: 'சந்திரமுகி 2' படத்தின் நாயகி குறித்து ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து

சும்மா உட்கார்ந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? ஒரு ஆச்சரிய வீடியோ!

கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்தால் கூட ஆயிரக்கணக்கில் தான் வருமானம் வரும் என்ற நிலையில் இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்த ஒருவர் லட்சக் கணக்கில் சம்பாதித்த தகவல்

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி காட்டும் மாநிலம்!!!

கொரோனா சிகிச்சைக்கு இன்றுவரை முழுமையான சிகிச்சை மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை விஞ்ஞானிகளிடையே புது நம்பிக்கையை அளித்திருக்கிறது

திருடனைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் கொரோனாவையும் கண்டுபிடிக்குமா??? சுவாரசியத் தகவல்!!!

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது.