கொலை வழக்கில் சிக்கினாரா தங்கமகன் மாரியப்பன்?

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் மாரியப்பன். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்த நிலையில் தற்போது இவர் மீது கொலை முயற்சி புகார் ஒன்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு கீழே விழுந்ததாகவும், அந்த சமயத்தில் அந்த சாலையில் வந்து கொண்டிருந்த மாரியப்பனின் கார் பைக் மீது மோதியதாகவும் தெரிகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் மாரியப்பனின் கார் சேதம் அடைந்ததாகவும், இதனை தட்டிக்கேட்க மாரியப்பனும் அவருடைய நண்பர்களும் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியதாகவும் அவருடைய செல்போனை பறித்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னர் மறுநாள் சதீஷ்குமார் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாக இருந்ததாகவும், சதீஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மாரியப்பன் கூறியபோது, 'மது போதையில் இருந்த சதீஷ்குமார் தனது புதிய காரில் மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டதாகவும், இதுகுறித்து கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். மேலும் கார் சேதமான செலவை சதிஷ்குமார் தாய் ஏற்பதாக கூறியும் அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

More News

முதல்வர் தனது பியூனுக்கு மட்டுமே கட்டளையிட முடியும். நாஞ்சில் சம்பத்

இரட்டை இலையை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பியுள்ளார்...

என்.டி.டி.வி பிரணாய்ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி-யின் துணை நிறுவனர் பிரணாய்ராய் வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் பிரணாய்ராய் வீட்டில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

கனரக ராக்கெட்டை முதன்முதலில் செலுத்தும் இஸ்ரோ: வரலாற்று நிகழ்வு என விஞ்ஞானிகள் பெருமிதம்

விண்வெளித்துறையில் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வெற்றிகரமாக செயற்கைக்கொள்களை அனுப்பி வைக்கும் நிலையில் இன்று ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் (GSLV-Mark III launch) என்ற ராக்கெட்டை இந்தியா விண்ணில் செலுத்துகிறது...

கடந்த வார ரிலீஸ் படங்களின் சென்னை வசூல் விபரங்கள்

கடந்த வெள்ளியன்று 'ஒரு கிடாயின் கருணை மனு, '7 நாட்கள்', 'போங்கு' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த மூன்று படங்களுமே கடந்த வார இறுதி நாட்களில் சராசரி வசூலை பெற்றுள்ளது...

ஆறாவது வாரத்திலும் அசராமல் வசூல் செய்து வரும் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி ஆறாவது வாரமாக உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது...