close
Choose your channels

கார் விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Sunday, July 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று இரவு தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் அவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிவேகமாக கார் ஓட்டி உயிர் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் அவரை பார்ப்பதற்காக டெல்லியில் உள்ள யாஷிகாவின் தந்தை சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.