முதல்வரின் கையை வெட்டுவதாக கூறிய கலைராஜன் மீது வழக்குப்பதிவு

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழக முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் இருதரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சசிகலா அணியின் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கலைராஜன் ஊடகத்தின் முன் பேசியபோது, 'அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் முயற்சித்தால் அவருக்கு கை இருக்காது' என்று பேசினார். கலைராஜனின் இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சு முதல்வரை மிரட்டும் அளவில் இருப்பதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான செல்லப்பாண்டியன் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து கொலைமிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கலைராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்தது குறித்து கலைராஜன் கூறியபோது, 'முதல்வர் குறித்து பேசியது தவறு என்று ஒப்புக்கொண்ட பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தம் மீது அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

More News

ஓபிஎஸ் கருத்துக்கு வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு. சசிகலா அதிர்ச்சி

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜக பின்னணியில் இருந்து ஆதரவு வழங்கி வருவதாக பல கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கூறிய கருத்து ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பிப்ரவரி 18-ல் உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும். ராகவா லாரன்ஸ்

கடந்த மாதம் மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான எழுச்சி போராட்டம் உலகின் கவனத்தை திருப்பிய புரட்சி போராட்டம். இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட அனைத்து தரப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர். கடைசி நாள் வன்முறையில் முடிந்தாலும், இந்த போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்று விட்டது...

நான். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவன். பிரபல காமெடி நடிகர்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் காமெடி நடிகர்களில் ஒருவர் கருணாகரன். பீட்சா, சூதுகவ்வும், யாமிருக்க பயமே, இன்று நேற்று நாளை, கெத்து உள்பட பல திரைப்படங்களில் கருணாகரனின் காமெடி ரசிகர்களால் வரவேற்பை பெற்றது...

தம்பித்துரையும் ஓபிஎஸ் அணியிலா? சசிகலா அதிர்ச்சி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பாக வேலை செய்து கொண்டிருந்தவரும், சசிகலாவின் முழு விசுவாசியுமான தம்பித்துரையும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

சூர்யாவின் 'சி 3' படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்கள்

சிங்கம், சிங்கம் 2' படங்களின் வெற்றியை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 9ஆம் தேதி வெளிவந்துள்ள 'சி3' படத்தின் சென்ற வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களள தற்போது பார்ப்போம்